வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக நாட்டு வீரரான சன்ஸ்கார் சரஸ்வத் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 28-26, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ரக்ஷிதா ராம்ராஜ், இஷாராணி பரூவா ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.