விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பானின் மினோரு கோகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 21-11, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, தென் கொரியாவின் ஜியான் ஹியோக் ஜின் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய மன்னேபள்ளி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.