விளையாட்டு

புரோ கபடி லீக்: யுபி யோதாசை வீழ்த்தி அரியானா அபாரம்

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 3வது ஆட்டத்தில் அரியானா அணி வெற்றி பெற்றது.

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 3வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அரியானா வீரர்கள்

சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், அரியானா அணி 53-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.

SCROLL FOR NEXT