வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. வங்தேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் ஆடும் லெவனில் இடம் பிடித்த வீரர்கள் பட்டியலை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி வெளியிட்டது. அப்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் பெயரை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாகிஸ்தான் அணி வீரர்கள் பெயர் வெளியிடப்பட்டது.
வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது.