உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுன்ஸ் வீசக் கூடியவர்கள். மேலும். கூக்கப்புரா பந்துகளை பயன்படுத்துபவர்கள். ஆனால் இங்கிலாந்து ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விதியாசமான சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாதன் லயன் கூறியதாவது:-
வெளிநாட்டு (இங்கிலாந்து) சீதோஷ்ண நிலை, டியூக்ஸ் பந்து உடன் வித்தியாசமாக சவாலாக இருக்கப் போகிறது. இரண்டு சிறந்த பந்து வீச்சு குழுவுடன் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சிறந்த சவாலாக இருக்கும்.
இவ்வாறு நாதன் லயன் தெரிவித்துள்ளார்.