கிரிக்கெட்

தொடரை வெல்லும் கடைசி டி20: இலங்கைக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

3-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மாலை மலர்

இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங்- லீவிஸ் களமிறங்கினர்.

லீவிஸ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கிங் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹோப் 18, சேஸ் 8, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 6 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

இதனையடுத்து கேப்டன் பவல்- குடாகேஷ் மோதி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.