கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி பற்றி சச்சின் டெண்டுல்கர் சொன்ன அந்த வார்த்தை!

வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் 776 ரன்களைக் குவித்தார்.

ஐ.பி.எல். 2026 தொடரில் தனித்து ஜொலித்த வீரர் என்றால், அது வைபவ் சூர்யவன்ஷி தான் . ஐ.பி.எல். 2025-லேயே இந்த இளம் வீரின் திறமையை உலகம் கண்டிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான அவர் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இருப்பினும், எந்தவொரு வீரருக்கும் இரண்டாவது சீசன்தான் மிகவும் முக்கியமானதாகும்.

எதிரணிகள் அவரது ஆட்ட பாணியை அறிந்திருக்கும், அணி மற்றும் ரசிகர்களிடம் இருந்து எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கும், ஆனால் சூர்யவன்ஷி அந்த அனைத்து விமர்சனங்களில் இருந்தும் மிகச் சிறப்பாக வெளிவந்தார். ஒரே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த தனது பேட்டிங் திறமையால், சூர்யவன்ஷி 16 போட்டிகளில் 776 ரன்களைக் குவித்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தையும் அது எதிரணிகளுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் அலசி ஆராய்ந்தார். இது குறித்த பதவில் அவர், "வைபவ் சூர்யவன்ஷி அடித்த ரன்களையும் தாண்டி ஆட்டங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவர் களத்திற்கு வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, எதிரணிகள் அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தன, அணிகள் அவருக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தன, மேலும் ரசிகர்கள் அவருக்காகக் காத்திருந்தனர்," என்று சச்சின் டெண்டுல்கர் ரெட்டிட் பதிவில் எழுதியிருந்தார்.

SCROLL FOR NEXT