இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
கடந்த 8-ம் தேதி ரிங்கு சிங்குக்கும், எம்.பி. பிரியா சரோஜிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களது திருமணம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி 2026-ல் நடைபெறும் என குடுப்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடைபெறும் திருமணத்திற்கான இறுதி தேதி விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் ரிங்குவின் கிரிக்கெட் பணிகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.