பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து குணமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார்.