கிரிக்கெட்

ரஞ்சி டிராபி: கர்நாடகாவுக்காக மீண்டும் சதம் விளாசிய கருண் நாயர்

முதல் நாள் முடிவில் கர்நாடகா 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.அந்த அணியின் கருண் நாயர் 142 ரன்கள் விளாசினார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

ரஞ்சி டிராபியின் 3வது போட்டி இன்று தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தொடர்ந்து சதமடித்த போதிலும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.