நடப்பு ஐ.பி.எல்.தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடந்து வருகிறது.
குவாலிபையர் 2 போட்டி நியூ சண்டிகரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.