பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனிலை நரைன், ராபின் உத்தப்பா ஆகிய தொடக்க அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்ததால் இலக்கை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஷார்ட் பால் பவுன்ஸ் யுக்தியை கடைபிடித்தது. தொடக்க வீரராக களம் இறங்கும் சுனில் நரைன் ஸ்டம்பிற்குள் பந்தை வீசினால் சிக்சருக்கு விரட்டி விடுவார். இதனால் ஷார்ட் பால் பவுன்ஸ் யுக்தியை பயன்படுத்தியது. 9 பந்திற்கு 26 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதேபோல்தான் உத்தப்பாவையும் போல்ட் தூக்கினார்.