ஐ.பி.எல்.(IPL)

பிளேஆஃப்ஸ் சுற்றில் நான்கு அணிகள்- ஒரு சுவாரஸ்யமான தகவல்

ஐபிஎல் 11-வது சீசனின் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் இடையில் சுவாரஸ்யமான தகவல் புதைந்துள்ளது. #IPL2018

மாலை மலர்

கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின.

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நான்கு அணிகளும் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளாகும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011-ம் ஆண்டும் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.