ஐ.பி.எல்.(IPL)

நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை- லுங்கி நிகிடி

நான் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK

மாலை மலர்

லுங்கி நிகிடியை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. ஐந்து போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தான், ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார்.

இதுகுறித்து நிகிடி கூறுகையில் ‘‘முதலில் ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஏலம் எடுத்தது சிறப்பானது.