நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 11 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
பவர்பிளே முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 22 ரன்னுடன் ஆடி வருகிறார்.
புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.