ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய சாம் கரண் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் 19 ஆவது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
சாஹல் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சர் விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுகளுடன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
Come for the hat-trick, stay for the celebration! ??pic.twitter.com/qWMyCZfJ12