முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்குப் பதில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இவர் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சனை வீழ்த்தினார்.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கர்ண் ஷர்மா பெற்றுள்ளார்.
2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.