இதன்மூலம் இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 3 அரைசதத்துடன் 313 ரன்கள் குவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே விளையாடி வருகிறார். 11-வது சீசனில் விளையாடிடும் ரெய்னா, ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.
அத்துடன் ஜடேஜா பந்தில் ரகானே ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் ஒரே பந்து வீச்சாளருக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.