ஐ.பி.எல்.

கிறிஸ் கெயில் சாதனையை சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார்: கும்ப்ளே

சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 37 பந்தில் 93 ரன்கள் குவித்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 37 பந்தில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் நடப்பு ஐ.பி.எல். சீசனில் 500 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் 53 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள கிறிஸ் கெயில் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் இதுவரை 59 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 6 சிக்சர்கள் மட்டும் தேவை என்பதால் நடப்பு தொடரில் இந்த சாதனையை நிச்சயம் எட்டுவார் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.