விராட் கோலி களத்தில் நிற்கும் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. விராட் கோலி 39 ரன்னிலும், ஏபி டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரன் அடிக்க திணறியது.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஸ்குமார் அந்த ஓவரை வீசினார். மந்தீப் சிங், கொலின் டி கிராண்ட்ஹோம் என்ற சிறந்த பேட்ஸ்மேன்களால் 12 ரன்கள் அடிக்க முடியவில்லை. நேர்த்தியான யார்க்கர் பந்துகளால் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அத்துடன் கடைசி பந்தில் கிராண்ட்ஹோமை க்ளீன் போல்டாக்கினார்.
புவனேஸ்வர் குமாரின் நேர்த்தியான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை சிறப்பாக வீசக் காரணம் என்ன என்பதை புவனேஸ்வர் குமார் விளக்கியுள்ளார்.