ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 38-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 15 பந்துகளில் 10 ரன்களுக்கும், இவருடன் களமிறங்கிய டிம் செய்ஃபர்ட் ரன் ஏதும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவன்ஷி 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பிறகு களமிறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 34 ரன்களும், ரிங்கு சிங் அபாரமாக ஆடி 51 பந்துகளில் 83 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சேர்த்தது. லக்னோ தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
156 எனும் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஏய்டன் மார்க்ரம் 27 பந்துகளில் 31 ரன்களை அடிக்க, இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 2 ரன்களுக்கு நடையை கடடினார். பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 38 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஆயுஷ் பதோனி தன் பங்கிற்கு 19 பந்துகளில் 24 ரன்களை அடித்து நம்பிக்கை அளித்தார். இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரில் பந்துவீசிய கார்த்திக் தியாகி 2 நோ பால் வீசிய நிலையில், 3-வது பந்தில் ஹிம்மத் சிங் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன் மூலம் கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இதைத் தொடர்ந்து 2 பந்துகள் ரன் கிடைக்காத நிலையில், கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், லக்னோ அணியின் ஷமி சிக்சர் விளாசினார். இதன் மூலம் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.