கிரிக்கெட்

சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. ஏற்கனவே ஷர்துல் தாக்குரை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

மாலை மலர்

துபாய்:

17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், இந்தியாவின் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஏற்கனவே, சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.