ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
காயம் காரணமாக விலகிய வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.