கிரிக்கெட்

ஈடன் கார்டன் மைதானம் திருப்திகரமானது: ஐசிசி மதிப்பீடு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவை 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

மாலை மலர்

துபாய்:

தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

இந்தப் போட்டி மூன்று நாளில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானம் 'திருப்திகரமானது' (Satisfactory) என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.