கிரிக்கெட்

IPL 2026 | 14 ஆண்டுகளில் முதல் முறை... கொல்கத்தா அணிக்கு மோசமான தொடக்கம்

ஐதராபாத் அணி தனது முதல் புள்ளிகளை பதிவு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வியாழக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த ஐ.பி.எல். தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா தன் பங்கிற்கு 21 பந்துகளில் 48 ரன்களும் விளாசினா். இதன் காரணமாக போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. பின்னர், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியை 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, ஐதராபாத் அணி தனது முதல் புள்ளிகளை பதிவு செய்தது.

கடந்த 14 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்பது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், அந்த சீசனில் தான் கொல்கத்தா அணி முதல் முறையாக ஐ.பி.எல். பட்டத்தை வென்றது.

கொல்கத்தா அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் 52 ரன்கள் எடுத்து தனது அணிக்கு அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். எனினும், தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் ஆட்டமிழந்தது சன்ரைசர்ஸ் அணி வெற்றியை எளிதாக பெற வழிவகுத்தது.

இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது.