டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெறும் போட்டியில் சூப்பர் 8 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான், 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு முன்னேறமுடியும்.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் - பக்கர் ஜமான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. ஃபர்ஹான் - பக்கர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஃபர்ஹான் படைத்துள்ளார்.
2014 டி20 உலககோப்பையின் போது விராட் கோலி 319 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஃபர்ஹான் 351* ரன்கள் அடித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.