இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். இன்று பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட் கோலியை பார்க்க அந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து, 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்திய அணியின் ரன் மிஷினாக விளங்கிய விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார். இதனால் விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரிடம் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fans at the Delhi stadium demanded selfies and autographs from Himanshu Sangwan after it took the wicket of Virat Kohli.#ranjitrophy2025 | #ViratKohli pic.twitter.com/C1G1BYQxRk