கிரிக்கெட்

4வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி... தொடரை 4-0 என கைப்பற்றி அசத்தல்

இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் சிறப்பாக ஆடி 79 ரன்களை குவித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என கைப்பற்றியது.

பேட்டிங் ஏமாற்றம்:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவ்ஷி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பிறகு களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் ஷிவம் துபே நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். ஷிவம் துபே 22 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க திலக் வர்மா 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி 80 ரன்களை குவித்தார்.

அபார பேட்டிங்:

159 எனும் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஜாஸ் பட்லர் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து பில் சால்ட் மற்றும் ஹேரி ப்ரூக் ஜோடி சிறப்பாக ஆடியது.

இந்திய அணியை போன்றே இங்கிலாந்து அணிக்கும் கேப்டன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இங்கிலாந்து தரப்பில் துவக்க வீரரான பில் சால்ட் 54 ரன்களும், கேப்டன் ஹேரி ப்ரூக் 78 ரன்களை விளாசினர்.

இங்கிலாந்து அணி 13.2 ஓவர்களிலேய 1 விக்கெட் மட்டும் இழந்து 152 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சீரிஸ் வெற்றி:

நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 11) நடைபெறுகிறது.

டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அடுத்தடுத்த ஆட்டங்கள் ஜூலை 16 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.