கிரிக்கெட்

IPL 2026 | ஐ.பி.எல். தொடரில் மோசமான சாதனை... ரஷித் கானை பின்னுக்குத் தள்ளிய அன்ஷுல் கம்போஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், 2026 ஐ.பி.எல். தொடரில் ஒரு விரும்பத்தகாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் 34 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்துள்ளார், இது இந்தத் தொடரின் ஒரே சீசனில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும்.

2025 சீசனில் 33 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த ரஷித் கான் வைத்திருந்த முந்தைய சாதனையை அன்ஷுல் கம்போஜ் தற்போது முறியடித்துள்ளார். வியாழக்கிழமை அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் கம்போஜ் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஐபிஎல் 2025 சீசனில், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான ரஷித் கான், 33 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். 2026 தொடரை கம்போஜ் சிறப்பாக தொடங்கினார், ஆனால் சமீபத்திய போட்டிகளில் அவரது ஆட்டம் கடுமையாக சரிந்துள்ளது. மேலும் அதிக ரன்களை கொடுக்கும் அவரது பந்துவீச்சு அணியை பெரிதும் பாதித்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சி.எஸ்.கே.-வின் 12-ஆவது லீக் போட்டியில், கம்போஜ் மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பந்துவீச்சில் மட்டுமே எட்டு சிக்ஸர்கள் விளாசப்பட்டன, இது ஒரு ஐ.பி.எல். போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச சிக்சர்கள் ஆகும். குறிப்பாக, அந்த இன்னிங்ஸ்-இன் போது இரண்டு முறை தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அவர் பந்துவீச்சில் அடிக்கப்பட்டன.

நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 229 ரன்களை எட்டியது. மறுபக்கம் 230 ரன்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடப்பு ஐ.பி.எல். 2026 தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்தது.