கிரிக்கெட்

ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம் - இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்

ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட் ஆனார் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

மாலை மலர்

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.