விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற பெங்கால் அணி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.

மாலை மலர்

ஐதராபாத்:

11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.

இறுதியில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.