ஆரவரமான வாரம். வார துவக்கத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் வார இறுதியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். முக்கிய கிரகங்களின் நிலவரம் சிம்ம ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. சுப கிரகங்கள் மிகச் சாதகமாக இருப்பதால் மனநிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சிலர் சொந்த தொழில் தொடங்கலாம். வேலையில் இருந்த பிரச்சிினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகலும். உடல் நிலை சிறப்பாகவுள்ளது. 26.9.2026 அன்று காலை 5.33க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து ஹயக்கிரீவர் வழிபாடு செய்வது நன்று.
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். அஷ்டமாதிபதி செவ்வாய்க்கு குரு, சனி சம்பந்தம் இருப்பதால் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சட்டச் சிக்கல்கள் முழுமையாக விலகும். சொத்து, தொழில் போன்றவற்றிக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்களால் அனுகூலமும் தாய் மாமன் வழி ஆதாயமும் உண்டு. அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பாதகம் விலகி சாதகம் நடக்கும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். பண்டிகைகள் விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்தமடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குல இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகமாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து கிரிவலம் செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சிினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தாய், தந்தையாகும் பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும். ஆரோக்கியமாக மன வலிமையுடன் செயல்படுவீர்கள். தந்தை யின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து மகாலட்சுமி வழிபடவும்.
சாதகமான வாரம். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளது. புகழ், அந்தஸ்து, சகல சௌபாக்கியங்கள், கெளரவத்துடன் வாழ்வீர்கள். பலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். நாவில் குல தெய்வம் நின்று பேசும். வாக்கு பலிதம் உண்டாகும். மெக்கானிக் மற்றும் இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். பூர்வீகச் சொத்தை விற்று புதியவீடு வாங்குவீர்கள். மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புத்திர பாக்கிய தடை விலகும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.