வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு, வைகாசி 15 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.46 மணி வரை. பிறகு திருவோணம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

நாளை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சிபுரம் ஸ்ரீவரதாஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - ஆரோக்கியம்

மிதுனம் -வெற்றி

கடகம் - சாதனை

சிம்மம் - பாசம்

கன்னி - உதவி

துலாம் - நட்பு

விருச்சிகம் - ஆர்வம்

தனுசு - போட்டி

மகரம் - ஆக்கம்

கும்பம் - பாராட்டு

மீனம் - பக்தி