வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 டிசம்பர் 2025: திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-1 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : சுவாதி மாலை 4.28 மணி வரை பிறகு விசாகம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

இன்று சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-ஊக்கம்

மிதுனம்-ஆர்வம்

கடகம்-பண்பு

சிம்மம்-பணிவு

கன்னி-பாசம்

துலாம்- உதவி

விருச்சிகம்-செலவு

தனுசு- உண்மை

மகரம்-வரவு

கும்பம்-வெற்றி

மீனம்-பக்தி