திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் 
வழிபாடு

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை மலர்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம்பெயரும் ராகு பெயர்ச்சி விழா கடந்த 21-ந்தேதி நடைபெற்றது.

ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி 2-ம் கட்டமாக கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.