வழிபாடு

மாரியம்மனுக்கு வீட்டில் படையல் போடுவது ஏன்?

ஞாயிறன்று அம்மனுக்கு வீட்டில் படையிலிட்டு வழிபடுவர்.வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவள் முத்துமாரியம்மன்.

மாலை மலர்

மாரியம்மன் திருவிழாவிற்குச் செல்லும் முன் ஞாயிறன்று அம்மனுக்கு வீட்டில் படையிலிட்டு வழிபடுவர். அப்போது வீட்டில் விளைந்த தானியங்கள், காதாலைக்கருகமணி, கொழுக்கட்டை, அரிசிமாவு போன்றவற்றைப் படைத்திடுவர். மாரியம்மன் படையலுக்கு வைத்த தானியங்களை அம்மன் திருவிழா அல்லது பஞ்சபிரகாரம் அன்று கோவிலில் வறியோருக்குப் போட்டுவிடுவர்.

உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் கருதாது வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவள் முத்துமாரியம்மன்.

அதனால் நாமும் எங்கெங்கும் பரவிக்கிடக்கும் முத்துமாரியம்மனை தொழுது வேண்டிய வளங்களைப் பெறுவோம்.

"மகமாயி சமயபுரத் தாயே உன் மகள் எனக்கு எல்லாமும் நீயே

கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்"

"வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு

அது வினை தீர்க்க நீ அமைத்தக் கூடு

திருநீரே அம்மா உன் மருந்து

அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து"