திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் மகாஉற்சவத்தின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. யாகசாலையில் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தி சொற்பொழிவு நடந்தது.
கலச ஸ்தாபன பூஜை, நவக்கிரக ஆவாஹனம், அக்னி பிரதிஷ்டை, ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி ஆகியவையும் நடந்தது. இன்று (புதன்கிழமை) சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.