வழிபாடு

நவக்கிரக பைரவர்களும்.. உப சக்திகளும்..

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப சக்தி உண்டு.கிரகத்திற்கு ஏற்ற உப சக்திகளை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

மாலை மலர்

* சூரியன் - சுவர்ணாகர்ஷண பைரவர் - பைரவி

* சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி

* செவ்வாய் - சண்ட பைரவர் - கவுமாரி

* புதன் - உத்மத்த பைரவர் - வராகி

* குரு - அசிதாங்க பைரவர் - பிரம்மாஹி

* சுக்ரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி

* சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி

* ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை

* கேது - பீஷண பைரவர் - சாமுண்டி

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் கால பைரவர் சன்னிதி இருக்கிறது. இங்குள்ள பைரவர் சிலையை, திருவாசியுடன் ஒரே கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் இந்த பைரவர் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் அருள்கிறார். தலையில் பிறை சந்திரன் சூடியிருக்கிறார். இவரை வழிபாடு செய்தால் ஆணவம் நீங்கும் என்கிறார்கள்.