மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஏழு நாட்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அபி ஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம். எல். ஏ. , தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் மாடம்பாக்கம் லயன் ஆ. நடராஜன், மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.