வழிபாடு

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடும்விழா

வைகாசி தேர்த்திருவிழா 6-ந்தேதி நடைபெற உள்ளது.தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழா காவல்துறை குடும்பத்தார் சார்பில் வருகிற 6-ந்தேதி காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. கோவில் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகளை செய்தார்.

இதில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், ஆச்சாரியார்கள் கண்ணன், ரவி, கோவில் பணியாளர் பூபதி, அர்ச்சகர் சண்முகவேல் ஆகியோர் முகூர்த்தக்காலை நட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் கவிதா, வசந்த், போலீசார் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT