வழிபாடு

சிவ பூஜைக்குரிய மலர்களும்- பலன்களும்

நீலச்சங்கு -அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும்.மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி.

மாலை மலர்

செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

மனோரஞ்சிதம், பாரிஜாதம்- பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி- மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி- கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூ- ஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி

நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

வில்வம், கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்தில் இருந்து பறிக்க கூடாது.

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி

ரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை-அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

2. வைகாசி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

3. ஆனி மாதம்:- வளர்பிறை-சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

4. ஆடி மாதம்:- தேய்பிறை-பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை-திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

7 .ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி. வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள். இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

10. தை மாதம்:- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

11. மாசி மாதம்:- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.

12.பங்குனி மாதம்:- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அவர் அருளை பெறுவோம்.