வழிபாடு

புதன் கிழமைகளில் சொல்ல வேண்டிய ஐயப்பன் மந்திரம்

ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று நம்முடைய புராணங்கள் கொண்டாடுகின்றன. இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.

ஐயப்பனை வணங்கி காயத்ரி மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வந்தால் மன வலிமை அதிகரிக்கும். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். ஐயப்ப மலைக்கு மாலை போட்டவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே இந்த மந்திரத்தை சொல்லலாம். தினமும் சொல்ல முடியாவிட்டாலும் புதன் கிழமைகளில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்முடன் துணையாக இருந்து நம்மை ஐயப்பன் காத்தருளுவார்.

தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

ஓம் பூதாதி பாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.

சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரத்தை ஜெபித்து வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். ஐயப்பன் அருளையும் ஆசியையும் வளத்தையும் அள்ளித் தருவார்.

மகா மந்திரம்:

பூதநாத ஸதானந்தா

சர்வ பூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ