பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநா தன் செவ்வாய் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் குருவும், ஜீவன ஸ்தானத்தில் புதனும் உச்சம் பெற்றிருக்கின்றனர். சுக்ரன் சொந்த வீட்டில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. எனவே வியாபாரம் வெற்றிநடைபோடும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். தற்சமயம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே சுபவிரயங்கள் செய்ய முன்வருவீர்கள்.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். ராசிநாதன் வலிமையிழக்கும் இந்த நேரத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். பொருளாதாரத் தடை அகலும். உடன்பிறப்புகளின் உதவி எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காது. அண்ணன், தம்பிகளுக்குள் மனவருத்தம் ஏற்படும் இன்னல்களுக்கு இடையே வாங்கிய சொத்தை, விற்கும் நிலை உருவாகலாம். அதேநேரம் செவ்வாய் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால், சில நற்பலன்களும் நடைபெறும். நீண்ட நாட்களாக வராத பாக்கிகள் வசூலாகும். சென்ற சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, நீங்கள் எடுத்த புதிய முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் வேலைப் பளு, திறமைக்குரிய அங்கீகாரம் இல்லாதது போன்ற காரணங்களால், வேறு நிறுவனத்திற்கு போகலாமா என்று சிந்திப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கின்றார். அவர் சப்தம ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ் கூடும். கல்யாணக் கனவு நனவாகும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ திருணம் நடைபெறுவதில், இதுநாள் வரை தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது அதற்கான வாய்ப்பு கைகூடும். வராது என்று நினைத்த தொகை வந்துசேரும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
மீன ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவான் மீது, உச்ச குருவின் பார்வை பதிகின்றது. ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெறுகிறது. எனவே நல்ல விரயங்களைச் செய்வது நல்லது. குறிப்பாக இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது இடம் வாங்குவது, வாகனப் பழுதுகளை சீர் செய்வது, பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்கிச்சேர்ப்பது போன்றவற்றில் அக்கறை செலுத்துவது நல்லது. இடமாற்றம், உத்தியோக மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். வக்ர சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு திடீர் திடீரென வருமானம் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும்.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் இடத்தில் சொந்த வீட்டில் துலாம் ராசியில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். தனாதிபதி புதனும், அஷ்டம - லாபாதிபதியான குருவும் உச்சம் பெற்றிருக்கின்றனர். நவக்கிரகங்களில் மூன்று கிரகங்கள் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றன. மாதத் தொடக்கத்தில் சகாய ஸ்தானாதிபதி சந்திரன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே இந்த மாதம் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறப்போகிறது. பணிபுரியும் இடத்தில் உயர்வு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியான செவ்வாய், நீச்சம் பெறுவது நன்மை தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வழக்குகளும், வாய்தாக்களும் ஓயும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்க முற்படுவீர்கள். சப்தம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் வந்துசேரும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவக்காத்திருப்பர். செவ்வாய் தோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.
புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர், புதன். எனவே தன வரவிற்கு பஞ்சம் ஏற்படாது. இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் அக்கறை கூடும். 'இல்லத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு. இப்பொழுது சுபநிகழ்வு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். தங்கம், வெள்ளி வாங்குவது மட்டுமல்லாமல், வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும். பல நல்ல காரியங்களைச் செய்யும் நேரம் இது.
மீனத்தில் சஞ்சரிக்கும் சனி, மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம், சனி பகவான். மீனத்தில் வக்ரம் பெறும் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் நன்மைதான். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர், சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய ஒரு புதிய வாய்ப்பு வரும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்ற கவலை அகலும். இக்காலத்தில் 'கருநிறக் காகம் ஏறி..' என்று தொடங்கும் சனி கவசப் பாடலை சனி பகவான் சன்னிதியில் பாடி வழிபடுவது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாத கமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ -மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்று சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே செயல்களில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். தொழில் முன்னேற்றம், புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சி போன்றவை கைகூடும். உங்கள் ராசியில் செவ்வாய் இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே துணிந்து சில காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் தொழிலில் கவனம் தேவை.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 6-ம் இடத்திற்கு அதிபதி நீச்சம் பெறுவதால் எதிரிகளின் பலம் குறையும். இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஆனால் 11-ம் இடத்திற்கும் செவ்வாய் அதிபதி என்பதால், இக்காலத்தில் திடீர் திடீரெனப் பணநெருக்கடி அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியுரிமைக்காக காத்திருப்பவர்களுக்கு அது கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இக்காலத்தில் குல தெய்வ வழிபாடும், அங்காரக வழிபாடும் அவசியம் தேவை.
உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர். புதன். அவர் புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கின்றார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்வதன் மூலம் இனிய பலன் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கட்டிடம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் உடன்பிறப்புகள் மும்முரம் காட்டுவர். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் வேறு இடத்தில் பணிபுரிய வாய்ப்புகள் வரலாம். என்றாலும் பழைய இடத்திலேயே இருப்பது நல்லது. அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பர்.
இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால் நோய் நொடிகள் அகலும். புதிய முயற்சிகளில் திடீரென வெற்றி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய நண்பர்கள் வழி கூறுவர். அதேநேரம் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி இருப்பதால் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் குறுக்கீடுகள் வரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கநிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றம் கூடும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதார நிலை திருப்தியைத் தரும். வரன்கள் முடிவாகும்.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் குருபகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிகாட்டும். இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது இல்லம் வாங்கிக் குடியேறுவதில் கவனம் செலுத்துவீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ராசியில் இருக்கும் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குருகவசம் பாடி குரு பகவானை வணங்குவது நல்லது.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் ஆவார். உங்கள் ராசிக்கு 5. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வலிமை இழக்கும்போது பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்கள் அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினையால் சொந்தங்கள் பகையாகலாம். புதிய தொழில் தொடங்கியது திருப்தியாக நடைபெறவில்லை என்று அதைக் கொடுக்க முன்வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி செயல்பட வேண்டாம். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களின் நன்மைக்காக நீங்கள் கொடுத்து உதவி செய்தாலும், அவர்கள் பகைமை பாராட்டுவர்.
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்கு பலம் பெற்ற சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக இல்லத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சுபச்செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத தன லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை, இப் பொழுது அதிக விலைக்கு விற்பீர்கள். அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு புதிய தொழிலுக்கான மூலதனத்தைப் போடுவீர்கள். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள்.
இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரை கடகத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பார்ப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப பாக்கிய ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே நீங்கள் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ அந்த காரியம் நடைபெறும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஒருசில சமயங்களில் சிறுசிறு குறுக்கீடுகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அஞ்சா நெஞ்சமும், அறிவு திறமையும் கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளுக்கு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் மாற்றங்களை செய்யலாமா என்று சிந்திக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனநிம்மதி குறையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடிவரும். நாடு மாற்றம், வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.