இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 
ஆன்மிகம்

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும் நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக் கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக் கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான். பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை அனுப்பி வைத்தான்.

எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத் தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும், மன்மதனையும் அனுப்பி வைத்தான். அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும், செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம் கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர்.

உஷா

பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார் என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள். அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில் இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின் மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள, மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா இருவரையும் சேர்த்து வைத்தாள். இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின் தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும் அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர். அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

உபநிடதங்கள்