வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம். நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள தீர்த்தம், பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.
வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம். எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை. பஸ்மம் சாம்பல் தான் என்கிற நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.