ஆன்மிகம்

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?

யானை வடிவம் கொண்ட விநாயகர், எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும்? என்ற சந்தேகம் எழுவது இயல்பே. இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

யானை வடிவம் கொண்ட விநாயகர், எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும்? என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானதுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.

இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.