வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம். 
ஆன்மிகம்

தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்

தவக்காலத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.

மாலை மலர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.

இந்த ஆலயமானது கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை சென்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பேர் கலந்து கொண்டனர். சிலுவை பாதையை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.