வேதநாராயணபெருமாள் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த காட்சி. 
ஆன்மிகம்

வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம்

தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதில் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இதனால் தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார். மேலும் பிரகலாதஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த ஸ்தலம் என பல சிறப்புகளைப்பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.


தேரில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேதநாராயணபெருமாள்.

இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேதநாராயணப்பெருமாள் துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை நம்பிரான் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்தார்.