பராபவ ஆண்டு, ஆடி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை இரவு 10.32 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.32 வரை பிறகு சதயம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சௌந்திர ராஜப் பெருமாள் வசந்த உற்சவம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும், ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் அலங்கார திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகனசேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
மேஷம் - சாதனை
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - பரிவு
கடகம் - அன்பு
சிம்மம் - இன்பம்
கன்னி - ஆதரவு
துலாம் - வாழ்வு
விருச்சிகம் - தாமதம்
தனுசு - களிப்பு
மகரம் - லாபம்
கும்பம் - ஆதாயம்
மீனம் - கடமை