பராபவ ஆண்டு, ஆனி-3 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை பின்னிரவு 2.33 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.06 வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி. கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் திருமஞ்சனம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் அபிஷேகம்.
மேஷம் - சுகம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - சுபம்
கடகம் - நன்மை
சிம்மம் - நிம்மதி
கன்னி - ஆதரவு
துலாம் - சாந்தம்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - பாசம்
மகரம் - உறுதி
கும்பம் - திடம்
மீனம் - உவகை